
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலானது வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது.
வேட்பு மனுத்தாக்கள் செய்யும் வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் மற்றும் சொத்துப்பட்டியல் விவரங்கள் ஆகியவை தேர்தல் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இதன்படி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வேட்புமனுக்கள் தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்படும்.வேட்புமனுக்கான பரிசீலனை முடிந்தவுடன் ,தேர்தலில் போட்டியிட தகுதியுடைய வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்.
வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட விரும்பாத பட்சத்தில் ,தங்களது மனுவை வருகிற 22-ந்தேதி மதியம் 3 மணிக்குள் பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது.
இதுவரை தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 51 வேட்புமனுக்களும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு, குளச்சல் ஆகிய 2 தொகுதிகளில் தலா 2 வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.