தமிழகத்தில் 4,024 வேட்பாளர்கள் போட்டி : இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 4,024 வேட்பாளர்கள் போட்டியிடப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மொத்தம் 7,255 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.மேலும், வேட்புமனுக்கள் அனைத்தும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பரிசீலனைக்குப் பிறகு 4,500 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன.மேலும், 2,700 கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

தமிழகத் தேர்தலில் அதிகபட்சமாக கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 97 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இவற்றில்,84 மனுக்கள் ஏற்கப்பட்டன,13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.இதேபோல்,அரவக்குறிச்சி தொகுதியில் 47 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இதில்,7 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு,40 மனுக்கள் ஏற்கப்பட்டன.மேலும் ,காங்கேயத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இவற்றில்,8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு ,50 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதனையடுத்து,தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முழு பட்டியலையும் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹி இன்று வெளியிட்டார்.இதன்படி,தமிழகத்தில் மொத்தம் 4,024 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

Next Post

முதுநிலை என்ஜினீயரிங் மாணவர்களுக்கு அடுத்த மாதம் 15 ஆம் தேதி செமஸ்டர் தேர்வுகள் தொடக்கம்

Thu Mar 25 , 2021
முதுநிலை என்ஜினீயரிங் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் அடுத்த மாதம் (ஏப்ரல்) 15 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதைப்போன்று, இணைப்பு கல்லூரிகளுக்கும் இதே தேதியில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், இளநிலை என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏற்கனவே தேர்வுகள் தொடங்கி வருகிற 26 ஆம் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பெருந்தொற்று காரணமாக […]
semester-exams-for-PG-students
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய