நவம்பர் 30 ஆம் தேதி முதல் மீண்டும் மருத்துவக் கலந்தாய்வு : மருத்துவக் கல்வி இயக்கம் !!

நிவர் புயல் காரணமாக மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைப்பட்டநிலையில் இருந்தது ,இது மீண்டும் நவம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என மருத்துவ கல்வி இயக்கம் அறிவித்துள்ளது .

மருத்துவக் கலந்தாய்வு நவம்பர் 24 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில்,நிவர் புயலின் காரணமாக மாற்றியமைக்கப்பட்டது .சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கில் நடைபெற இருந்த மருத்துவக் கலந்தாய்வு நவம்பர் 24 ஆம் தேதி முதல் நவம்பர் 29 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது .

நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு ,டிசம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயலானது தமிழகத்தின் பல மாவட்டங்களில் பல்வேறு இன்னல்களையும் , அசாதாரண சூழலையும் ஏற்படுத்தியது .நிவர் புயல் காரணமாக போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன .இதன் காரணமாக மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது .

Next Post

திருவண்ணாமலையில் வரும் 29 ஆம் தேதி பரணி மற்றும் மகா தீபத்திருவிழா - வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு !!

Fri Nov 27 , 2020
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வர் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமையன்று கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது . ஆண்டுதோறும் திருவண்ணாமலையில் தீப ஒளித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் .இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அவர்களின் வாழ்வில் ஒளி வீச அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு அருள் பெறுவார்கள் .ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு 28 ,29 மற்றும் 30 ஆகிய […]
thiruvannamali-deepam-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய