
தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.ஒவ்வொரு துறையிலும் அமல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களை அறிவித்த நிதியமைச்சர், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் தற்போது வெளியிட்டுள்ளார்.
துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் பின்வருமாறு:
- தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு.
- தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு.
- காவல் துறைக்கு ரூ.8,930 கோடி.
- தீயணைப்புத் துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு.
- நீதித் துறைக்கு ரூ.1,713 கோடி ஒதுக்கீடு.
- மீன்வளத் துறைக்கு ரூ.303 கோடி ஒதுக்கீடு.
- குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி ஒதுக்கீடு.
- நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899 கோடி ஒதுக்கீடு.
- மின்சாரத்துறைக்கு ரூ.19,872 கோடி ஒதுக்கீடு.
- பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கீடு.
- உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369 கோடி ஒதுக்கீடு.
- மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.18,933 கோடி ஒதுக்கீடு.
- சுற்றுலாத்துறைக்கு ரூ.187 கோடி ஒதுக்கீடு.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக ஒட்டு மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.4,142 கோடியாக உயர்வு.
- பருவநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கையில் தனிக்கவனம் செலுத்துவதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு
- விளையாட்டு மேம்பாட்டிற்கு ரூ.225 கோடி ஒதுக்கீடு.