தமிழக பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு அறிவிக்கப்பட்ட அம்சங்கள் என்னென்ன ?

தமிழக பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் விதமாக தற்போது வெளியிடப்பட்டுள்ள தமிழக பட்ஜெட் வரவு – செலவுத்திட்டத்தில் மொத்தமாக 32,599.54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • தேசிய அடைவு ஆய்வு கணக்கெடுப்பின்படி , கற்றல் விளைவுகளின் அடிப்படையில் முதல் மூன்று மாநிலங்களுக்குள் தமிழ்நாடு கொண்டுவரப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து ஆசிரியர்களுக்கும் தொழில்நுட்ப வசதியுடன் கண்காணிக்கக்கூடிய மற்றும் ஆதாரங்கள் அடிப்படையிலான பயிற்சி வழங்க ஏதுவாக 413 கல்வி ஒன்றியங்களுக்கும் தலா 40 தொடுதிரை கையடக்க கணினிகள் ) Tablet ( 13.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
  • 2025 – ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் அந்தந்த வகுப்பு அளவில் படிக்கவும் , எழுதவும் , அடிப்படைக் கணக்குகளை செய்யவும் முடியும் என்பதை உறுதி செய்வதற்காக , அடிப்படை கல்வியறிவு மற்றும் கணித அறிவை உறுதி செய்ய ‘ எண்ணும் எழுத்தும் இயக்கம் ‘ , 66.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தீவிரமாக செயல்படுத்தப்படும்.
  • அரசுப்பள்ளி மாணவர்கள் கணினித் திறன்களை இளம் வயதிலேயே பெறுவதை உறுதிசெய்ய 1,784 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 114.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும் . மேலும் , 865 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 20.76 கோடி ரூபாயில் ஸ்மார்ட் வகுப்பறைகள் துவக்கப்படும்.
  • அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி , கவின்திறன் மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை அளிக்கும் நோக்கத்துடன் , மாதிரிப் பள்ளிகள் அமைத்திட சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • கொரோனா பெருந்தொற்றின் பரவல் ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளைக் குறைப்பதே இந்த அரசின் உடனடி முன்னுரிமையாக இருக்கும் . பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு விரைவாக செயல்படும் வகையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் தேவையான கொரோனா தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது மற்றும் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் .
  • கற்றலில் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்வதற்காக பள்ளி நேரங்களை தவிர பள்ளி வளாகங்களுக்கு வெளியே குறைதீர் கற்றல் வழங்குவதற்கான விரிவானத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

டிஎன்பிஎஸ்சி : துறைத்தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு..

Fri Aug 13 , 2021
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளுக்கு, தேர்வர்கள் அவர்களுடைய துறைத் தேர்வுகளுக்கான ஒரு முறைப் பதிவின் வழியாக தங்களுடைய விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
Tnpsc-Departmental-exam-Hall-Ticket
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய