
இந்திய தேர்தல் ஆணையம், வாக்களிக்கும் வயதை அடைந்தவர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை முழுமையாக ஆற்ற வேண்டும் .
தேர்தல் விதிமுறையின் படி ,வாக்காளர்கள் தங்களது வாக்கை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கு சாவடிகளில் நேரில் சென்று வாக்களிக்கலாம் அல்லது அஞ்சல் மூலம் வாக்களிக்கலாம் .
இதில் ,கீழ்காணும் பிரிவுகளில் உள்ளவர்கள் தங்களது வாக்கினை அஞ்சல் மூலம் செலுத்தலாம்.தேர்தல் சட்டப்படி ,வாக்காளர் தங்களது வாக்கை அஞ்சல் முறையில் செலுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது.
1 .ராணுவப் பணியில் உள்ள வாக்காளர்கள் மற்றும் பிரதிநிதி மூலமாக வாக்களிக்க விரும்புபவர்கள் மற்றும் இவர்களின் மனைவியர் ஆகியோர் அஞ்சல் மூலமாக தங்களது வாக்கினை செலுத்தலாம்.
2 .சிறப்பு வாக்காளர்கள் மற்றும் அவர்களது மனைவியர்.
3.தேர்தலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தங்களது வாக்கினை அஞ்சல் மூலம் வாக்களிக்கலாம்.
4.தடுப்புக் காவலில் உள்ள வாக்காளர்கள்.
5.பிரகடனப்படுத்தப்பட்ட வாக்காளர்கள் தங்களது வாக்கினை அஞ்சல் மூலம் செலுத்தலாம்.
தேர்தல் ஆணையமானது,அஞ்சல் மூலம் வாக்களிக்கும் பட்டியலில் மேலும் சில பிரிவினரை சேர்த்துள்ளது..
1.80 வயதிற்கும் மேற்பட்டோர் (மூத்த குடிமக்கள்)
2.மாற்றுத் திறனாளிகள்
3.கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள்,பாதிப்பு இருப்பதாக கருதப்படுபவர்கள் ஆகியோர் அஞ்சல் மூலம் தங்களது வாக்கினை செலுத்தலாம்.
4.அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவச சேவைகளில் ஈடுபடும் வாக்காளர்கள் அஞ்சல் மூலம் வாக்கினை செலுத்தலாம்.