
தொழில்நுட்பக் கல்வித் துறையானது தட்டச்சு ,சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் போன்ற துறைகளுக்கான தேர்வானது ஏப்ரல் மாதம் நடைபெறும் என அறிவித்துள்ளது .
நடப்பாண்டிற்கான தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளதாக தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவர் கே.விவேகானந்தன் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் .
தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தை www.tndte.gov.in/site என்ற தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் தகவல்களை பெற 044-22351018, 22351014 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தேர்வுக்கட்டணம் :
1 .ஜுனியர் தேர்வருக்கு ரூ.65
2 .சீனியர் தேர்வருக்கு ரூ.85
3 .இண்டர் தேர்வுக்கு ரூ.80
4 .ஹைஸ்பீடு தேர்வுக்கு ரூ.130
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
தலைவர்,தேர்வு வாரியம்,
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்,
கிண்டி, சென்னை – 600025
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 26 ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும் .