கொரோனா வைரஸ் தொற்று பரவல் மிகநீண்ட காலத்திற்கு இருக்கும் : உலக சுகாதார நிறுவனம்..

கொரோனா வைரஸ் தொற்று பரவல் என்பது எதிர்பார்த்த கால அளவைக் காட்டிலும் மிகநீண்ட காலத்திற்கு இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என பரிணமித்த வைரஸ் தொற்று பல நாடுகளில் மூன்றாம் அலை பாதிப்பிற்கு இட்டுச் சென்றுள்ளன.

2019ஆம் ஆண்டின் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. தொற்று பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட பொதுமுடக்கங்களும், கட்டுப்பாடுகளும் உலக நாடுகள் பலவற்றிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களை காக்க உலக நாடுகள் அனைத்தும் ஒரு வலுவான பொதுசுகாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுதல் , தனிமனித இடைவெளிகளைப் பின்பற்றுதல், முகக்கவசங்களை அணிதல், கிருமி நாசினிகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொதுசுகாதாரத்தை முதன்மையான ஒன்றாகவும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய கட்டமைப்பையும் உருவாக்குவது கடுமையான சூழல்களில் மக்களைக் காக்க இன்றியமையாத ஒன்றாக அமையும் எனவும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

Next Post

TNPSC Group 4 - தேர்வர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு..

Tue Sep 28 , 2021
TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் தேதிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படாது என்றும், விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் எனவும் TNPSC தெரிவித்துள்ளது.
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய