தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக,ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் 2 கட்டங்களாக, அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மொத்தம் 14,573 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும்.
உள்ளாட்சி தேர்தல் அட்டவணை:
வேட்பு மனு தாக்கல் தொடக்கம் – 15.09.2021
வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் – 22.09.2021
வேட்பு மனு பரிசீலனை – 23.09.2021
வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் – 25.09.2021
முதற்கட்ட தேர்தல் – 06.10.2021
2ஆம் கட்ட தேர்தல் – 09.10.2021
வாக்கு எண்ணிக்கை – 12.10.2021