
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தலானது அடுத்த மாதம் ஏப்ரல் 6 தேதி நடைபெற இருக்கிறது, தேர்தல் முடிந்த பிறகு பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது .இதனிடையில் அனைத்து பாடங்களையும் விரைவில் நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வானது மே 3 ஆம் தேதி தொடங்கவுள்ளது, அதாவது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மறுநாளே பிளஸ் 2 பொதுத் தேர்வும் தொடங்கிவிடுகிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வானது மே 3 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது .
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி முடிந்த பிறகு ,பிளஸ் 2 பொதுதேர்வானது மே 3 தொடங்கிவிடும் ,இந்த இடைப்பட்ட கால அவகாசத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வை நடத்திக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது . எனவே, மாணவர்களுக்கு தொடர்ந்து பாடங்களை நடத்தி முடிக்கவும், மேலும் பொதுத் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்த பல திருப்புதல் தேர்வுகளை நடத்தவும், ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர் .