
தஞ்சையில் உள்ள அலிவலம் எஸ்.இ.டி வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு பயின்றுவரும் வர்ஷிஹா என்ற மாணவி தொடர் ஓட்டத்தில் பங்கேற்று நோபல் உலக சாதனையை படைத்துள்ளார் .
நோபல் உலக சாதனை நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து ,பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. புகழேந்திகணேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
இப்போட்டியில் பங்குப்பெற்ற மாணவி வர்ஷிஹா 2 மணி நேரத்தில் 23 கிலோமீட்டர் தொடர் ஓட்டம் ஓடி நோபல் உலக சாதனையை படைத்தார் .இவர் செங்கப்படுத்தான்காடு(தஞ்சை மாவட்டம்) கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, மாலா தம்பதியரின் ஒன்பது வயது மகள் ஆவர் .
நோபல் உலக சாதனை படைத்த மாணவி வர்ஷிஹாவை நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் பாராட்டி சான்றிதழ்களையும் ,பதக்கத்தையும் அணிவித்தார் .