சிக்கிமில் இரவு நேரப் பொதுமுடக்கம் அமல் ..

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக தற்போது பரவி வருகிறது.இதன் காரணமாக கொரோனா விதிமுறைகளை அனைத்து மாநிலங்களுக்கும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனிடையில், சிக்கிம் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக இரவு நேரப் பொதுமுடக்கத்தை அம்மாநில முதல்வர் பிரேம் சிங்க் தாமங் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தடுக்க வியாழக்கிழமை இரவு முதல் இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பொது முடக்கமானது இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும் எனவும் ,அந்நேரங்களில் உணவகங்கள் ,மதுபான கடைகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல் ,தனிமனித இடைவெளி போன்ற கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Post

தமிழக சட்டமன்ற தேர்தல் : வேட்பு மனுத்தாக்களுக்கு இன்று கடைசி நாள் ..

Fri Mar 19 , 2021
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலானது வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. வேட்பு மனுத்தாக்கள் செய்யும் வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் மற்றும் சொத்துப்பட்டியல் விவரங்கள் ஆகியவை தேர்தல் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக […]
candidate-nomination
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய