கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்கொள்ளும் இந்தியா : இன்று புதிதாக 39,726 பேருக்கு கொரோனா தொற்று..

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,726 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது . உலகளவில் கொரோனா பாதிப்பானது 12.23 கோடியை தாண்டியுள்ளது.இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோன தொற்றால் 25,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 39,726 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,15,14,331 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 154 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,10,83,679 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,59,370 ஆகும் .

நாடு முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 2,71,282 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது .மேலும் இதுவரை 3,93,39,817 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

தமிழகத்தில் கொரோன நிலவரம் : புதிதாக 989 பேருக்கு கொரோன பாதிப்பு ..

Fri Mar 19 , 2021
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவ தொடங்கியுள்ளது .குறிப்பாக மகாராஷ்டிரா,கேரளா ,கர்நாடகா மற்றும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரானாவின் தாக்கம் அதிவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர(வியாழக்கிழமை) நிலவரப்படி,புதிதாக 989 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.இதன்படி தமிழகத்தில் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 8,63,363 ஆக உள்ளது.இதில் ௮௬௫௪௪௪ பேர் நோய் தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர். தற்போது,மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் 71794 பேர் […]
tamilnadu-district-wise-corona-list
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய