தமிழ் வழிக் கல்வியில் சலுகைகள் – மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் சலுகை வழங்கும் சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டதால், தமிழ் வழியில் படிக்க சேரும் மாணவர்களின் எண்ணிக்கையானது தற்போது உயர்ந்துள்ளது .

அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையானது தற்போது பள்ளிகளில் துவங்கியுள்ள நிலையில் ,பல மாணவர்கள் ஆறாம் வகுப்பை தமிழ் வழியில் படிக்க முன்வருகின்றனர் .தனியார் பள்ளிகளில் பயின்றுவந்த மாணவர்களை , ஆறாம் வகுப்பில் இருந்து, அரசு பள்ளிக்கு மாற்றும் பெற்றோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் , மருத்துவ படிப்பில் சேர்வதற்கு, 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தற்போது வழங்கப்பட்டுள்ளது .மேலும் , தமிழ் வழியில் படித்து வரும் பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு, அரசு பணிகளில் சேர 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.இதற்கான சட்டம், ஏற்கனவே அமலில் இருந்த நிலையில், மாணவர்கள் பட்டப் படிப்பை மட்டும், தமிழில் படித்தால் போதாது என்றும் ,ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, கட்டாயம் தமிழில் படித்திருக்க வேண்டும் எனவும் சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏராளமான மாணவர்கள் தங்களது படிப்பை தமிழ் வழியில் படிக்கத் தொடங்கியுள்ளனர் .இதனால் பெற்றோர்களும் தமிழ் வழியில் தங்களது பிள்ளைகளை சேர ஆர்வமாக வந்த வண்ணம் உள்ளனர் .

Next Post

இந்தியா முழுவதும் புதிதாக 17,407 பேருக்கு கொரோனா பாதிப்பு..மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு ..

Thu Mar 4 , 2021
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17 ,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது .மேலும் பலி எண்ணிக்கை 89 ஆக உள்ளது . வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி (கடந்த 24 மணி நேரத்தில்) ,புதிதாக17 ,407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கையானது 1,11,56,923 ஆக உள்ளது . மத்திய அமைச்சகம் […]
corona-virus-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய