தஞ்சையில் வேகமாக பரவும் கொரோனா : பள்ளி ,கல்லூரிகளில் அதிகரிக்கும் பாதிப்பு..

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது அதிவேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை மாவட்டத்தில் முன்னதாகவே 7 பள்ளிகளில் 68 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 தனியார் பள்ளிகளில் 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தற்போது,தஞ்சாவூர் கல்லூரி மாணவர்கள் 5 பேருக்கும், மேலும் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கும் மற்றும் திருவையாறு அரசு கல்லூரி மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 14 சுகாதாரக் குழுக்களை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது. அதன் மூலம் 439 பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 2.75 லட்சம் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Post

சென்னையில் கொரோனா தடுப்பூசி முகாம் : நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது..

Sat Mar 20 , 2021
சென்னையில் தொடங்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதுக்குட்பட்ட இணை நோய் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். சென்னையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னியில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் 20 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு 2 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இன்று […]
Corona-vaccination-camp-in-Chennai
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய