2022 -ல் சந்திராயன் -3 விண்ணில் ஏவப்பட வாய்ப்பு : இஸ்ரோ தலைவர் அறிவிப்பு

சந்திராயன் -3 என்ற விண்கலமானது நிலவை ஆய்வு செய்வதற்காக அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திராயன் – 3 விண்கலமானது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் ,இதன் மூலம் இந்தியாவின் திறமையை உலகிற்கு பறைசாற்றுவதாகவும் கூறினார்.

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் -2 விண்கலமானது 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திராயன் -2 விண்கலமானது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது .ரோவர் வாகனத்துடன் இணைந்து நிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் விண்கலம் ,நிலவின் பரப்பில் திட்டமிடத்தைவிட வேகமாக இறங்கி அதன் இணைப்பை துண்டித்தது.இதனால் நிலவில் ஆய்வு செய்யும் முதல் நாடான கனவை இந்தியா இழந்தது .

இதன் தொடர்ச்சியாக தற்போது சந்திராயன் -3 விண்கலமானது விண்ணில் ஏவப்பட்ட உள்ளது .இதற்கான பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார் .மேலும் இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில் ,வரும் டிசம்பர் மாதம் ‘ககன்யான் ‘ திட்டத்தின் கீழ் முதல் ஆளில்லா விண்கலத்தை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் .

Next Post

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் B.Ed படிப்புகள் தொடக்கம் : என்சிடிஇ(N.C.T.E) மற்றும் யு.ஜி.சி(U.G.C) அனுமதி..

Tue Feb 23 , 2021
தமிழ்நாட்டு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு B.Ed பட்டப்படிப்புக்கு தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம்(N.C.T.E) மற்றும் யு.ஜி.சி(U.G.C) அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நடப்பு கல்வியாண்டிற்கான (2020 -2021)சேர்க்கையானது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெறும் எனவும் ,மேலும் வகுப்புகள் மே மாதம் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட் படிப்புக்கு ,தமிழ் வழியில் 500 மாணவர்களும் ,ஆங்கில வழியில் 500 மாணவர்களும் என மொத்தம் 1000 […]
tamilnadu-open-university
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய