தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு TNPSC தேர்வில் இடஒதுக்கீடு : ஆளுநர் ஒப்புதல் !!

தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் .தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வில் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு ஆளுநர் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார் .

டிஎன்பிஎஸ்சி எனும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வில் ,தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு 20 % இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதாவை தமிழக அரசு நிறைவேற்றியது .இந்த மசோதாவானது ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசால் அனுப்பிவைக்கப்பட்டது .

தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாவானது ,ஆளுநர் மாளிகையில் 8 மாத காலமாக நிலுவையில் வைக்கப்பட்டது .பின்னர் இந்த மசோதாவிற்கு ஆளுநர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளார் .

தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியதற்கான காரணம் குறித்து உச்சநீதிமன்றம் கடந்த வாரம் கேள்வி ஒன்றை வினவியது குறிப்பிடத்தக்கது .

Next Post

இன்றைய ராசி பலன்கள் : 09 -12 -2020

Wed Dec 9 , 2020
மேஷம் மேஷ ராசி நண்பர்களே இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிச்சியானது உண்டாகும் .எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் திருப்திகரமாக இருக்கும் .முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக் கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும்.கடன் பிரச்சனைகள் தீரும் .வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் . ரிஷபம் இன்று உங்கள் கனவு நிறைவேறும் நாளாக அமையும் .புதிய முயற்சிகள் மேற்கொள்வதை […]
indraya-raasi-palangal-09-12-2020-
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய