
அனைத்திந்திய தொழில்நுட்ப கவுன்சிலான AICTE ஆனது,நடப்பாண்டில் பயின்றுவரும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ,பொறியியல் பட்டப்படிப்புகளில் (B.E.,B.Tech) விண்ணப்பிக்க கணிதமும் இயற்பியலும் கட்டாயமில்லை என தெரிவித்துள்ளது .
மேலும் ,மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை நடப்புக் கல்வியாண்டில் அமலுக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.இதன் மூலம் வணிகவியல் மற்றும் வேளாண்மை தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் 12 வகுப்பு மாணவர்கள், இயற்பியல், கணிதம், கணினி அறிவியல், வேதியியல், தகவல் தொழில்நுட்பம், உயிரியல், போன்ற துறைகளில் ஏதேனும் மூன்று துறைகளில் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.