பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் -ஏப்ரல் 2020
தமிழ்நாடு மாநிலச் செய்திகள் :
மாற்றுத் தடுப்பு மருந்து அறிவியல்:
1.தமிழ்நாடு டாக்டர் எம் .ஜி .ஆர் மருத்துவப் பல்கலைக்கழகமானது மாற்றுத் தடுப்பு மருந்து அறிவியலின் மூலம் சார்ஸ் Cov-2 தொற்றிற்கு எதிராக ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது .
2.மாற்றுத் தடுப்பு மருந்து அறிவியலைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் மெனிங்கோக்கள் மற்றும் ஸ்டாப்பைலோக்கள் () போன்ற தொற்றுகளுக்காக தடுப்பு ,மருந்துகள் உருவாக்கப்பட்டுளளன .
3.முதல் நிலையில், இந்தப் பல்கலைக்கழகமானது வைரஸ் மரபணுவைக் கட்டுப்படுத்தக் கூடிய செயற்கை பாலிபெப்டைடு என்ற ஒரு மூலக்கூறை உருவாகியுள்ளது .இது ஆராய்ச்சியின் இரண்டாம் கட்டத்திற்குச் செல்ல இருக்கின்றது .
4.இந்தப் பல்கலைக்கழகமானது,அந்த பாலிபெப்டைடுக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை .இதன் துணை வேந்தர் சுதா சேஷய்யன் ஆவார் .
பொருளாதாரச் செய்திகள் :
15வது நிதி ஆணையம் நிதி ஒதுக்கீடு :
மத்திய நிதித்துறை அமைச்சகமானது மத்திய வரிகளில் மாநிலங்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான அவற்றின் பங்கான ரூ .46,038 கோடியை விடுத்துள்ளது .
இந்த வரி ஒதுக்கீடானது 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது .