![](https://tamil.aptinfo.in/wp-content/uploads/2021/03/corona-positive-cases-in-india.jpg)
இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22,854 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .கொரோன தொற்றால் இன்று மட்டும் 126 பேர் பலியாகியுள்ளனர். தற்போது, இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இன்று காலை(வியாழக்கிழமை) நிலவரப்படி நாடு முழுவதும் புதிதாக 22,854 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது .இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,12,85,561 ஆக அதிகரித்துள்ளது . இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
ICMR (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்) புள்ளிவிவரப்படி ,இதுவரை கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,09,38,146 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,58,189 ஆகும் .இந்தியா முழுவதும் தற்போது கொரோனவுக்காக 1,89,226 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது .