வரும் காலங்களில் டெல்டா வகை கொரோனா ஆதிக்கம் செலுத்துமா? – உலக சுகாதார அமைப்பு..

டெல்டா வகை கொரோனா வைரஸானது 96 நாடுகளில் வரும் காலங்களில் தனது ஆதிக்கத்தை செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பானது அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளில் அதிகம் பரவியுள்ளது. தற்போது உலகம் முழுவதும் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவிவருகிறது. டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாடு இப்போது 96 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது, இது கடந்த வாரத்தை விட தற்போது 11 நாடுகள் அதிகம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜூன் 29, 2021 நிலவரப்படி, உலக சுகாதார அமைப்பு தனது கொரோனா வாராந்திர தொற்றுநோயியல் அறிக்கையில் 96 நாடுகள் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தெரிவித்து உள்ளன. இருப்பினும் இது மாறுபாடுகளை அடையாளம் காணத் தேவையான வரிசைமுறைத் திறன்கள் குறைவாக இருப்பதால் இது குறைத்து மதிப்பிடப்படுகிறது.

சமீபத்திய ஆய்வின்படி, ஆல்பா மாறுபாட்டின் பாதிப்புகள் 172 நாடுகளிலும் 120 நாடுகளில் பீட்டா வகை பாதிப்பும் 72 நாடுகளில் காமா வகை பாதிப்பும் மற்றும் 96 நாடுகளில் டெல்டா (11 புதிய நாடுகள்) வகை பாதிப்புகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வரவிருக்கும் மாதங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Next Post

தபால் ஆயுள் காப்பீடு, ஊரக தபால் ஆயுள் காப்பீடு முகவர் பணிகளுக்கு ஜூலை 9-ல் நேர்முகத் தேர்வு..

Fri Jul 2 , 2021
ஜூலை 9 ஆம் தேதி தபால் ஆயுள் காப்பீடு மற்றும் ஊரக தபால் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணிகளுக்கான நேர்முகத்தேர்வு சென்னை தாம்பரம் தபால் அலுவலங்களின் மூத்த கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தபால் அலுவலக மூத்த கண்காணிப்பாளர் டி.வி.சுந்தரி விடுத்துள்ள செய்தியில், தபால் ஆயுள் காப்பீடு, ஊரக தபால் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணிகளுக்கு விருப்பம் உள்ளவர்கள், தாம்பரம் தபால் அலுவலங்களின் […]
India-post-recruitment
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய