இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலைக்கான எச்சரிக்கை ..

அதிவிரைவாகப் பரவும் தன்மை கொண்ட ஏஒய்.4.2 ரக புதிய வகை கொரோனா தற்போது பெங்களூருவில் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு சில கட்டுப்பாடுகளை தற்போது விதித்துள்ளது.

புதிய வகை கொரோனா பாதித்தவர்கள் இரண்டு பேரும் கொரோனா அறிகுறிகள் ஏதுமின்றி இருந்தாகத் தெரியவந்துள்ளது.மேலும் இவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் பாதிப்பில்லை என்பது தெரிய வந்துள்ளது. எனவே, புதிய வகை கரோனா அச்சம் கொள்ளும் வகையில் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

புதிய வகை ஏஒய்.4.2 ரக கரோனா வைரஸ் பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யாவில் வேகமாகப் பரவி வருகிறது.இது கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியதற்கான அறிகுறியாகும்.

கொரோனா மூன்றாவது அலையை முற்றிலும் தடுக்க நாம் அனைவரும் கொரோனா தடுப்பூசியை முறையாக இரு தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ளுதல் அவசியமாகும்.இது நம் உயிரை காக்கும் கவசமாகும்.மேலும் கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடித்தால் மூன்றாவது அலையை முற்றிலுமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒழித்திடலாம்.

Next Post

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

Thu Oct 28 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 12,288 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1,315- பேர் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 15 பேர் பலியாகியுள்ளனர்.மொத்த […]
district-wise-corona-updates-27-10-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய