
விஐடி(VIT) பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் இம்மாதம் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது.
மத்திய அரசின் அந்தஸ்து பெற்ற, நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான,வி.ஐ.டி., கல்வி நிறுவனத்தில், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வுக்கு, வரும், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலுார் ‘இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’ என்ற வி.ஐ.டி., நிறுவனம், வேலுார், சென்னை, ஆந்திரா மற்றும் போபால் ஆகிய இடங்களில், நிகர் நிலை பல்கலையாக செயல்பட்டு வருகிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இந்த கல்வி நிறுவனத்தின் தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் சேர, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பாண்டிற்கான நுழைவுத் தேர்வு ஆன்லைன்’ வழியில், வரும், 28, 29, 31ம் தேதிகளில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
நுழைவு தேர்வு விண்ணப்பம், கல்வி நிறுவனத்தில் இடம் பெற்றுள்ள படிப்பு விவரங்கள் , மாணவர் சேர்க்கை நடவடிக்கை போன்றவை முழு விவரத்தைப் பெற www.vit.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.