தைப்பூச திருநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் ,வடலூரில் அமைந்துள்ள திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் ஜோதி தரிசன வழிபாடு வெகு விமர்சையாக நேற்று (வியாழக்கிழமை )நடைபெற்றது .
வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் மாதந்தோறும் பூசம் நட்சத்திரத்தன்று ஜோதி தரிசனம் நடைபெறும் .இதில் தை மாதத்தில் வரும் ஜோதி தரிசனம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் .இதன்படி ,வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் 150 -வது ஆண்டு தைப்பூச ஜோதி பெருவிழாவானது கொடியேற்றத்துடன் (புதன்கிழமை ) நடைபெற்றது .இதனைத்தொடர்ந்து வடலூரில் உள்ள சத்திய தரும சாலையில் வள்ளலாரின் அகவலை பாராயணம் நடைபெற்று சன்மார்க்க கொடியை வள்ளலார் அன்பர்கள் ஏற்றினர் .
திருவருட்பிரகாச வள்ளலாரின் ஜோதி தரிசனம் :
விழாவின் முக்கிய நிகழ்வான வியாழக்கிழமை அன்று ஜோதி தரிசனம் நடைபெற்றது .அதிகாலை 6 மணிக்கு 7 திரைகள் விளக்கப்பட்டு தரிசனம் காண்பிக்கப்பட்டது .இதனை தொடர்ந்து காலை 10 மணி ,நண்பகல் 1 மணி ,இரவு 7 மணி ,10 மணி ஆகிய நேரங்களிலும் ,வெள்ளிக்கிழமை (இன்று ) 5 .30 ஆகிய 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது .ஜோதி தரிசனத்தை காண பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தெய்வ தரிசனத்தை பெற்றனர் .ஜோதி தரிசனமானது பக்தர்களுக்காக எல்இடி(LED) மூலம் காண்பிக்கப்பட்டது .
இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வாக ஜனவரி 30 ஆம் தேதி சித்திவளாக திருவறை தரிசன நிகழ்வு
நடைபெறும் .