தடுப்பூசி போட்டும் டெல்டா வைரஸ் ஆதிக்கம்..

இந்தியாவில் ஏஒய் 1, ஏஒய் 2, ஏஒய்3 (டெல்டா பிளஸ்) ஆகிய வைரஸ்கள் மராட்டிய மாநிலத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் ஜூலை மாதம் காணப்பட்டன. அதே நேரத்தில் இவை டெல்டா வைரசை விட அதிக வளர்ச்சி தன்மையைக் கொண்டிருக்கவில்லை.

  • இந்தியாவில் இதுவரையில் 61 டெல்டா பிளஸ் பாதிப்புகளை கண்டறிய முடிந்துள்ளது.
  • கொரோனா இனப்பெருக்க விகிதம் என்பது 0.89 சதவீதமாக உள்ளது. அதாவது கொரோனா பாதித்த ஒருவர், 0.89 சதவீதத்தினருக்கு மட்டுமே பரப்புகிற தன்மையைக் கொண்டுள்ளார். தடுப்பூசி போட்டுக்கொண்டும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களில் அதிகம் பேருக்கு டெல்டா வைரஸ் ஆதிக்கம் கண்டறியப்பட்டுள்ளது.
  • 30 ஆயிரத்து 230 மாதிரிகளை பிரித்தெடுத்து ஆய்வு செய்ததில் 20 ஆயிரத்து 324 டெல்டா வைரசை சேர்ந்தவைதான்.
  • இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்புகள் டெல்டா வைரஸ் சார்ந்தவை ஆகும்.
  • நோய்த்தொற்றின் தீவிரத்தை குறைப்பதிலும், இறப்பைக் குறைப்பதிலும் தடுப்பூசி மிகவும் பயனுள்ளது. கொரோனா பரவலைக்குறைப்பதில் பொது சுகாதார நடவடிக்கைகளும், தடுப்பூசியும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • தடுப்பூசி போடுகிறவர்களுக்கும் கொரோனா பாதிப்பு என்பது பொதுவான ஒன்றுதான். இந்தியாவிலும் இது எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இன்று வெளியீடு..

Mon Aug 23 , 2021
தமிழகத்தில் 2020-21 ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் இன்று ( ஆகஸ்ட் 23) இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் உயர்கல்வியில் சேர 12ஆம் வகுப்பு மதிப்பெண் அவசியம் என்பதால் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு கடந்த […]
10th-student-mark-sheet
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய