சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்!

சீனாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம் செலுத்தவேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது மீண்டும் பரவி வருகிறது. இதன்காரணமாக பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இதுவரை 223 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இருந்தபோதும் அங்கும் வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபெய், ஃபுஜியான், ஹெனான், ஸீஜியாங், ஹூனான் ஆகிய 5 மாகாணங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை மாகாண அரசுகள் கட்டாயமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Post

இந்தியாவில் 6 பேருக்கு புதிய ஏஒய்.4 வகை கொரோனா பாதிப்பு..

Tue Oct 26 , 2021
இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 6 பேருக்கு டெல்டா வகை கொரோனாவின் புதிய உருமாறிய வைரஸாக அறியப்பட்டுள்ள ஏஒய்.4 பாதிக்கப்பட்டிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 6 பேருக்கும் நடத்தப்பட்ட சோதனையில், அவர்கள் டெல்டா வகை கொரோனாவின் புதிய உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இவர்களில் 3 பேர் இந்தூர் நகரையும் மற்ற மூவர் இந்தூர் மாவட்டம் மோவ் பகுதியையும் சேர்ந்தவர்கள் […]
AY-4-Delta-variant-in_india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய