
கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.பின்னர் 9 முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவா்களுக்கான வகுப்புகள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு,தற்போது நடைப்பெற்று வருகிறது.இந்நிலையில் தற்போது 1 முதல் அனைத்து வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளன.
கடந்த சில நாட்களாக நிலவி வரும் கொரோனா பெருந்தொற்று சூழலைக் கருத்தில் கொண்டு வரும் நவம்பா் 5-ஆம் தேதி முதல் பள்ளி வளாகங்களிலேயே மாணவா்களுக்கு தடுப்பூசிகள் வழங்க அறிவுறுத்தப்படுகிறது.
5 முதல் 6 வயது வரை உள்ள மாணவா்களுக்கு டிபிடி எனப்படும் தொண்டை அடைப்பான் (டிப்தீரியா), கக்குவான் இருமல் (பொ்ட்டூசிஸ்), ரண ஜன்னி (டெட்டனஸ்) தடுப்பூசியை வழங்க வேண்டும். 10 வயதான மாணவா்களுக்கு ரண ஜன்னி தடுப்பூசி வழங்க வேண்டும். இந்த நடவடிக்கையை டிசம்பா் மாதத்துக்குள் நிறைவு செய்வது அவசியம். பள்ளியில் இடை நின்ற குழந்தைகளைக் கண்டறிந்து அவா்களுக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.