![](https://tamil.aptinfo.in/wp-content/uploads/2020/11/Yelakkai-cardamom.jpg)
ஏலக்காய் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது .இது நம் உடலுக்கு பல வகைகளில் பயனளிக்கிறது .ஏலக்காயில் புரதம் ,இரும்பு ,பொட்டாசியம் ,சுண்ணாம்பு,பாஸ்பரஸ் ,வைட்டமின் ஏ,பி மற்றும் சி சத்துக்களையும் கொண்டுள்ளது . ஏலக்காய் வாசனை திரவியமாக மட்டும் இல்லாமல் ,பல மருத்துவ பலன்களை கொண்டுள்ளது .
1 .சளி ,இருமலுக்கு ஏலக்காய் ஒரு மிகச் சிறந்த தீர்வாகும் .குளிர்காலத்தில் பலரும் சளி ,இருமலால் அவதிப்படுவது வழக்கமாகும். இதற்கு ஏலக்காயை பால் ,டீ யில் போட்டு குடித்தால் நல்ல தீர்வு கிடைக்கும் அல்லது ஏலக்காய் கஷாயம் குடிக்க சளி ,இருமல் பறந்து போகும் .
2 .ஏலக்காயில் உள்ள மெலடோனின் ஆனது ,உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்க வல்லது .இது உடல் எடையை சீராக்க உதவும் .
3.ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆஸிடெண்ட் செரிமானத்தை தூண்ட வல்லது .இது மலச்சிக்கலையும் நீக்க வல்லது .இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன் பாலில் சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து குடித்தால் நன்மைகள் ஏராளம் .
4 .ஏலக்காயில் உள்ள மற்றுமொரு சிறப்பானது ,இது சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் சிறந்த பொருளாகும் .அனைத்து வித சுவாசக் கோளாறுகளை நீக்க வல்லது .
5.ஏலக்காயை வாயில் போட்டு கொள்வதால் பற்கள் ,ஈறுகள் நல்ல வலிமையை பெரும் .பல் வலி மற்றும் வாய்த்துறுநாற்றம் போன்றவற்றை முழுமையாக குணப்படுத்தும் .
6.வாந்தி, மயக்கம் ,தலைசுற்றல் இருந்தால் ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுவதால் உடனடியாக பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கும் .