
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2020 ஆம் ஆண்டுக்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 2 முதல் மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்ட யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வு கொரோனா பெருந்தொற்று காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மீண்டும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வு தொடங்கப்படும் என்றும், இதற்கான அழைப்பு upsc.gov.in, upsconline.in ஆகிய இணையதளங்களில் விரைவில் பதிவேற்றப்படும் என்றும் யுபிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஜூன் 27ஆம் தேதி நடைபெறவிருந்த யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் அக்டோபர் 21க்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேர்முகத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.