தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் நாளை முதல் தொடக்கம்..

ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தட்டச்சு, சுருக்கெழுத்து, வணிகவியல் ஆகிய தொழில்நுட்பத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் தொழில்நுட்பத் தேர்வுகளான தட்டச்சு, சுருக்கெழுத்து, வணிகவியல் போன்ற தேர்வுகள் செப்டம்பர் 16 முதல் 28-ம் தேதி வரை நடைபெறும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்ததுடன் அதற்கான தேர்வுக்கால அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தொழிநுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் 3500க்கு மேற்பட்ட வணிகவியல் பயிலகங்கள் (தட்டெழுத்து மற்றும் சுருக்கெழுத்து) செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்வுகள் குறித்த கூடுதல் விவரங்கள் அறிய தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இந்தத் தேர்வுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடைபெறுகின்றன.

கொரோனா தடுப்பு நடவடிக்கை:

  • தேர்வுக்கு வரும் மாணவர்கள், தேர்வு அதிகாரிகள், அனைவரும் 3 அடுக்கு பாதுகாப்பு கொண்டமுகக்கவசம் அணிந்து வரவேண்டும்.
  • தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு இடையில் 2 மீட்டர் இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்.
  • உடல்வெப்பநிலை அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டால் அத்தகைய தேர்வர்களுக்கு தனிஅறை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Next Post

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 34,403 பேருக்கு கொரோனா..

Fri Sep 17 , 2021
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 34,403 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட சற்று அதிகம் ஆகும்.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,33,81,728 ஆக உயர்ந்துள்ளது. நேற்று அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3,595, தமிழ்நாட்டில் 1,693, ஆந்திராவில் 1,367, கர்நாடகாவில் 1,108, மிசோரத்தில் 1,171 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் […]
covid-19-testing-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய