இந்தியாவில் முதன் முறையாக – குழந்தைகள் நேய காவல் பிரிவு – திருச்சியில் தொடங்கப்பட்டது !!

குழந்தைகள் நேய காவல் பிரிவு ஆனது இந்தியாவில் முதன் முறையாக குழந்தைகளுக்கென காவல் பிரிவானது திருச்சியில் தொடங்கப்பட்டது .

குழந்தைகள் நேய காவல் பிரிவு:

குழந்தைகள் நேய காவல் பிரிவு இந்தியாவில் முதன் முறையாக திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 10 இடங்களில் காவல் துறை சார்பாகவும்,தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து ,குழந்தைகளுக்கென பிரத்தியேக காவல் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது .

குழந்தைகளுக்கென 2015 ஆம் ஆண்டு இளைஞர் நீதி சட்டம் உருவாக்கப்பட்டது .இச்சட்டமானது குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை விசாரிப்பதற்கும்,குற்றச் செயல்களில் ஈடுபடும் குழந்தைகளை நல்வழிப்படுத்தவும் உருவாக்கப்பட்டது ஆகும் .

குழந்தைகள் நேய காவல் பிரிவின் முக்கிய நோக்கம்:

குழந்தைகள் நேய காவல் பிரிவின் முக்கிய நோக்கமானது குழந்தைகளை காவல் நிலையத்திற்குள் அழைத்து வரக்கூடாது.எந்த வித காரணத்துக்காகவும் குழந்தைகளை கைது செய்து ,சிறையில் அடைக்க கூடாது மற்றும் சீருடையில் இருந்துகொண்டே ,குழந்தைகளை விசாரிக்க கூடாது போன்ற விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்ற வகையிலும் ,காவல் நிலையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் புகார் அளிக்க வரும்போது ,அவர்களுக்கான சூழ்நிலையை நல்ல முறையில் உருவாக்கி தரவேண்டும் என்ற நோக்கத்தில் குழந்தைகள் நேய காவல் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது .

குழந்தைகள் நேய காவல் பிரிவானது திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா அவர்களின் தலைமையில் 10 இடங்களில் குழந்தைகள் நேய காவல் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது .இது 5 மாவட்டங்களில் தலா இரண்டு காவல் நிலையங்கள் வீதம் பத்துஇடங்களில் உருவாக்கப்பட்டுள்ளது .இது காவல் நிலையங்களில் வரும் குழந்தைகளிடம் அச்ச உணர்வை போக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது . குழந்தைகள் நேய காவல் பிரிவின் கீழ் வரும் புகார்களை விசாரிக்க பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் டி.ஐ.ஜி ஆனி விஜயா கூறியுள்ளார் .

குழந்தைகள் நேய காவல் பிரிவு அமைக்கப்பட்டுள்ள இடங்கள் :

1 .திருவெறும்பூர் மற்றும் துவரங்குறிச்சி (திருச்சி மாவட்டம் )
2.லாலாபேட்டை மற்றும் வெங்கமேடு (கரூர் மாவட்டம் )
3.ஆவுடையார் கோவில் மற்றும் பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம் )
4.பெரம்பலூர் நகர் காவல் நிலையம் மற்றும் மங்கலமேடு (பெரம்பலூர் மாவட்டம்)
5.உடையார் பாளையம் மற்றும் கூவாகம் (அரியலூர் மாவட்டம்)

Next Post

இன்றைய ராசி பலன்கள் : 17 -11 -2020

Tue Nov 17 , 2020
மேஷம் மேஷ ராசி நண்பர்களே இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் விவாதங்களை தவிர்த்தல் நல்லது .நீங்கள் செய்யும் காரியங்களில் தடைகள் ஏற்படலாம் .மனதில் ஒரு சில குழப்பங்கள் ஏற்படலாம் .குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் குறைவாகவே கிடைக்கும்.புதிய முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்த்தல் நல்லது . ரிஷபம் இன்று உங்கள் ராசிக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம் .எந்த செயல்களிலும் […]
indraya-raasi-palangal-17-11-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய