கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கான சிகிச்சை – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த நிலையில் ,தற்போது புதிய பாதிப்பாக கருப்பு பூஞ்சை நோய் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.தமிழகத்தில் இதுவரை 2,700 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மேலும் இதுவரை 148 பேர் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்துள்ளனர்.

கரும்பூஞ்சை பாதிப்புக்கான அறிகுறிகள் தெரிந்தால் அலட்சியப்படுத்தக்கூடாது, மேலும் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உடனே சிகிச்சை மேற்கொண்டால் முழுமையாக குணமடையலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கரும்பூஞ்சை நோய் சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.மேலும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் 6 வாரங்கள் வரை கவனிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

  • வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும், *தூசி மிகுந்த இடங்களுக்குச் முற்றிலுமாக செல்லக்கூடாது.
  • ரத்த சர்க்கரை அளவை முழுமையாக கண்காணிக்க வேண்டும்.
  • சர்க்கரை அளவு 180க்கு மேல் இருப்பது, வாந்தி, வயிற்றுவலி, தொடர் தாகம், சிறுநீர் போவது அதிகரித்தல், போன்ற பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
  • முகத்தின் ஒருபகுதியில் வீக்கம், மூக்கில் ஒரு துவாரத்தில் தொடர்ச்சியாக அடைப்பு, நெற்றியில் கடும்வலி, கண்சிவத்தல், இரட்டைப்பார்வை, வாய்ப்புண், பல் வலி அல்லது பல் வலுவிழத்தல், கருப்பு அல்லது பழுப்பு நிற திரவம் மூக்கில் இருந்து வடிதல் இருந்தால் மருத்துவமனையை அணுக வேண்டும்.
  • மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆம்போடெரிசின் பி டியோக்ஸிகொலேட் , லிபோசோமல், ஆம்போடெரிசின் பி போன்ற மருந்துகளை சிகிச்சைக்கு பயன்படுத்தலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆம்போடெரிசின் வகை மருந்துகளை ஏற்றுக்கொள்ளாத நோயாளிகளுக்கு பொசகோனசோல் , இஸவுகோனசோல் மருந்துகளை பயன்படுத்தலாம் என்று வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Next Post

தமிழகத்தில் மேலும் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு..

Fri Jun 25 , 2021
கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மே மாதம் 10ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 28ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் ,ஜூலை 5 வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, நோய்த் தொற்று பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் நோய்த் தொற்று […]
tamilnadu-extended-lockdown
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய