இந்தியாவில் புதிதாக 3,26,098 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே கொரோனாவின் இரண்டாவது அலை தீவீரமாக பரவத் தொங்கியது.மேலும் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தது.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டி வந்தது.இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகளும், முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது.ithankaaranamaga பல மாநிலங்களிலும் தினசரி பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியது.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3,26,098 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,43,72,907 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 3,890 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,04,32,898 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,66,207 ஆகும் .

இந்தியா முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 36,73,802 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது .மேலும், இதுவரை 18,04,57,579 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இதுவரை 31 கோடியே 30 லட்சத்து 17 ஆயிரத்து 193 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

Next Post

சீனாவின் தியான்வென்-1 விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது..

Sat May 15 , 2021
உலக நாடுகள் அனைத்தும் தற்போது விண்வெளியில் தங்களது முழு ஆதிக்கத்தை நிலை நாட்ட முயற்சி செய்து வருகின்றன.விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக,சீனா கடந்த ஆண்டு ஜூலை மாதம் தியான்வென்-1 விண்கலத்தை அனுப்பியது.இந்த விண்கலமானது கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்துள்ளது.தற்போது செவ்வாய்கிரகத்தில் தியான்வென்-1 […]
Tianwen1-satellite
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய