பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நாளை கடைசி தேதி..

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த 19 வகையான துணை பட்டப்படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளுக்கான நடப்பு (2021-2022 ) கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பப்பதிவு நேற்று மாலை5 மணியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங்களுடன் செயலாளர், தேர்வுக் குழு, எண்.162, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010 என்ற முகவரியில் நவ.10-ம் தேதி (நாளை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.நாளை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாளாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மழையால் போனபைட் சான்றிதழைப் பெற முடியாத மாணவ, மாணவிகள், மாணவர் சேர்க்கை கலந்தாய்வின்போது, ‘போனபைட்’ சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று மருத்துவக்கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Post

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,126 பேருக்கு கொரோனா தொற்று ..

Tue Nov 9 , 2021
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 10,126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது கடந்த 266 நாட்களில் இல்லாத அளவில் தினசரி பாதிப்பில் குறைவு ஆகும்.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,43,77,113 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் 262 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 332 பேர் இறந்துள்ளளர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் […]
vaccine-for-covid19
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய