டோக்கியோ பாராஒலிம்பிக் மகளிர் துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை தங்க பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில், மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா அதிரடியாக விளையாடி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரை சேர்ந்த அவர் போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்துள்ளார். இதன்மூலம் இந்தியாவுக்கு அவனி லெகாரா முதல் தங்க பதக்கத்தை பெற்று தந்துள்ளார்.
பாராலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களை வென்றுள்ளது.