இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு – புதிதாக 38,628 பேருக்கு கொரோனா தொற்று ..

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு நேற்றைய பாதிப்பை விட சற்று குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 38,628 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,18,95,385 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,27,371 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,10,55,861 ஆக உள்ளது.நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 40,017 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,12,153 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.நாட்டில் இதுவரை 50,10,09,609 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்கியது மத்திய அரசு..

Sat Aug 7 , 2021
இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால அனுமதியை வழங்கியுள்ளது மத்திய சுகாதாரத் துறை. இந்தியாவில் இதுவரை கோவிஷீல்டு, கோவாக்சின் உள்ளிட்ட 4 கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், 5வது தடுப்பூசியாக தற்போது ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் ஒரே ஒரு டோஸ் போட்டுக்கொள்ளும் வகையில் அதன் தடுப்பூசியை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. உலக முழுவதும் டெல்டா வகை கரோனா […]
Johnson-and-johnson-vaccine
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய