இந்தியாவில் கொரோனா நிலவரம்- ஒரே நாளில் 43,733 பேருக்கு தொற்று..

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நேற்று பாதிப்பை விட இன்றைய பாதிப்பு வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பப்படுகின்றன.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 43,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 3,06,63,665 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 930 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,97,99,534 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,04,211 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 47,240 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,59,920 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.நாட்டில் இதுவரை 36,13,23,548 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

டெக்ஸ்டைல் தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு ..

Wed Jul 7 , 2021
தரமணியில் உள்ள அரசு டெக்ஸ்டைல் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு டிப்ளமா படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ள தரமணியில் ‘டெக்ஸ்டைல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’ என்ற, நெசவு தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, முதலாம் ஆண்டு டிப்ளமா படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.இதற்கான விண்ணப்பங்களை www.tngptc.in, www.tngptc.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தரமணியில் உள்ள டெக்ஸ்டைல் […]
Institute-of-Texttile-Technology
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய