
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 24,354 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,37,91,061 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களின் நிலவரப்படி கொரோனா பாதிப்பு 19 ஆயிரத்துக்குள் இருந்தது. நேற்று 26,727 ஆக இருந்த நிலையில், தற்போது பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இதன் மூலம் குணமடைந்தோரின் விகிதம் 97.86 சதவிகிதமாகவும், சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.81 சதவிகிதமாக குறைந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 234 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,48,573 ஆக உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,30,68,599 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 25,455 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,73,889 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 88,74,81,554 கோடியாக அதிகரித்துள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.