இந்தியாவில் 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு..

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று சற்று வெகுவாக குறைந்துள்ளது .கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பப்படுகின்றன.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 39,796 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 3,05,85,229 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 723 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,97,00,430 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,02,728 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 42,352 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,82,071 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.நாட்டில் இதுவரை 35,28,92,046 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் அமல் : இ-பாஸ், இ-பதிவு முறை ரத்து..

Mon Jul 5 , 2021
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களும் 3 வகையாக பிரிக்கப்பட்டு,பல்வேறு கட்டுப்பாடுகளும் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது தொற்று பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் வரும் 12 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இ […]
corona-lockdown-relaxation-in-tamilnadu
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய