இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் – புதிதாக 34,703 பேருக்கு தொற்று உறுதி..

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று சற்று வெகுவாக குறைந்துள்ளது .கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பப்படுகின்றன.

இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 34,703 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 3,06,19,932 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் நேற்று இந்தியாவில் ஒரே நாளில் 553 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,97,52,294 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,03,281 ஆகும் .நேற்று ஒரே நாளில் கொரோனா பிடியிலிருந்து 51,864 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,64,357 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.நாட்டில் இதுவரை 35,75,53,612 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

டி.என்.பி.எஸ்.சி. நேர்முகத் தேர்வு நாளை தொடக்கம் : தேர்வு மையங்கள் அட்டவணை வெளியீடு..

Tue Jul 6 , 2021
கொரோனா பெருந்தொற்று காரணமாக துறைத் தேர்வுகளுக்கான 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை மொழி தேர்வுகளுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.இந்நிலையில் தற்போது இந்த தேர்வு நடைபெற உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டுக்கான துறைத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி முதல் பிப்ரவரி 21-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வுகளில் 2-ம் நிலை எழுத்து தேர்வுக்கான […]
Tnpsc-interview-announced
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய