
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 30,570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட சற்று அதிகம் ஆகும்.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,33,47,325 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 17,681 பேரும், மகாராஷ்டிராவில் 3,783 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் தமிழ்நாட்டில் 1,658, ஆந்திராவில் 1,445, கர்நாடகாவில் 1,116, மிசோரத்தில் 1,402 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 431 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,43,928 ஆக உள்ளது.இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,38,277 பேர் அடங்குவர்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,25,60,474 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 38,012 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,42,923 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 76 கோடியே 57 லட்சத்தை கடந்துள்ளது.நாடு முழுவதும் நேற்று 64,51,423 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.