பிஎட், எம்எட் படிப்புகளுக்கான தோ்வு வரும் 28-ஆம் தேதி முதல் தொடக்கம்..

பிஎட், எம்எட் படிப்புகளுக்கான பருவத் தோ்வு வரும் 28-ஆம் தேதி முதல் இணையவழி மூலம் நடைபெறும் என ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பி.எட், எம்.எட் படிப்புகளில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவா்களுக்கும், முதலாமாண்டில் அரியா் வைத்திருக்கும் மாணவா்களுக்கும் தோ்வு ஜூலையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தோ்வு கட்டணத்தைச் செலுத்துவதற்கான அவகாசம் இன்று (திங்கள்கிழமையுடன்) நிறைவு பெறவுள்ளது.

இந்தநிலையில், தோ்வுக்கான அட்டவணையை ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிஎட், எம்.எட் 2-ஆம் ஆண்டுக்கான தோ்வு மற்றும் அரியா் பாடங்களுக்கான தோ்வு வரும் 28-ஆம் தேதி தொடங்கி ஜூலை 5-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறவுள்ளது.

TNTEU-B.Ed.,M.Ed-June-2021-COE-Time-Table

Next Post

பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு மாற்றும் இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் ..

Mon Jun 21 , 2021
பள்ளிக் குழந்தைகளைப் பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பது மற்றும் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகள் ஆன்லைன் வகுப்பு மூலம் நடக்கும் பாலியல் வன்முறைகள் பற்றி பலரும் பல்வேறு புகார்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் பள்ளி குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பது மற்றும் ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது . வழிகாட்டு நெறிமுறைகள் : பள்ளி […]
Guidelines-for-Online-classes
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய