![](https://tamil.aptinfo.in/wp-content/uploads/2021/07/tnpsc-exam-2021.jpg)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
மேலும், டி.என்.பி.எஸ்.சி. வினா – விடைத்தாள் அறிக்கையில், தமிழ் பதிப்பு முதலிலும், ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் டி.என்.பி.எஸ்.சி. தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாநில தொழில்நெறி மையத்தில் இணையவழிப் பயிற்சி அளிக்கிறது. இந்த இலவச இணையவழிப் பயிற்சி சிஸ்கோ (Cisco) செயலி வழியாக நேரடியாக வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கான இந்த சிறப்பு பயிற்சியானது ஜூலை 5 முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் பயிற்சியில் தேர்வுக்குத் தயாராவதற்கான பாடக் குறிப்புகளை வழங்குவதோடு, மாதிரித் தேர்வுகளும், அரசு அலுவலர்களே நடத்தும் மாதிரி நேர்முகத் தேர்வுகளும் தனிச் சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.