
கொரோனா பெருந்தொற்று காரணமாக துறைத் தேர்வுகளுக்கான 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை மொழி தேர்வுகளுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.இந்நிலையில் தற்போது இந்த தேர்வு நடைபெற உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டுக்கான துறைத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி முதல் பிப்ரவரி 21-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வுகளில் 2-ம் நிலை எழுத்து தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
நேர்முகத் தேர்வு குறித்து தேர்வர்களுக்கு குறுந்தகவல், மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.மேலும் இதற்கான குறிப்பாணை தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் மையங்கள் மற்றும் தேதி விவரம் வருமாறு:-
7 (நாளை) மற்றும் 8-ந்தேதி- (நாகர்கோவில், நெல்லை தேர்வர்கள்) – நாகர்கோவில் மையம்
9-ந்தேதி- (மதுரை, அரியலூர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, தூத்துக்குடி, பெரம்பலூர், நாகப்பட்டினம், சிவகங்கை, திருவாரூர், விருதுநகர்) – மதுரை மையம்
12 மற்றும் 13-ந்தேதி- (கோவை, ஊட்டி, ஈரோடு, கரூர், சேலம், திருப்பூர், நாமக்கல்) – கோவை மையம்
15-ந்தேதி – (கிருஷ்ணகிரி, விழுப்புரம், தர்மபுரி) – கிருஷ்ணகிரி மையம்.
16-ந்தேதி- (வேலூர், திருவண்ணாமலை, கடலூர்) – வேலூர் மையம்
17-ந்தேதி- (திருவள்ளூர், காஞ்சீபுரம்) – திருவள்ளூர் மையம்
26 மற்றும் 27-ந்தேதி- (சென்னை, டெல்லி) – சென்னை