TNPSC – மே 2021 துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..

2020 ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட துறை தேர்வுகளில் 129 தேர்வுகளில், எந்தெந்த தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என்ற பட்டியலும் 08.05.2021 அன்று TNPSC தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

கொரோனா பெரும் தொற்று காரணத்தால் இந்த பட்டியலில் இடம்பெறாத 14 தேர்வுகளின் முடிவுகள் 08.06.2021 அன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெளியிடப்படாத தேர்வுகளின் முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு , மே 2021 துறைத் தேர்வுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி , 15.06.2021 வரை நீடிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Next Post

தமிழகத்தில் ஒரே நாளில் 30 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு ..

Wed May 12 , 2021
தமிழகத்தில் இன்று உச்சத்தை அடைந்த கொரோனா பாதிப்பு.இன்று ஒரே நாளில் 30,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 7564 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,72,735 ஆக உள்ளது. மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்களின் முழு விவரம் ..
district-wise-covid-cases-in-tamilnadu
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய