அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா வைரஸ் B.1.1.529 ..

உலகம் முழுவதிலும் பரவிய கொரோனா வைரசின் தாக்கம் தற்போது குறையத் தொடங்கிய நிலையில் ,தற்போது புதிதாக உருமாற்றம் அடைந்த B.1.1.529 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், அண்டை நாடுகளான போத்ஸ்வானா உள்ளிட்ட சில நாடுகளுக்கு பரவியிருக்கிறது. இந்த வைரசின் பரவுதல் வேகமும், வீரியமும் மிக அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வகை கொரோனா வைரசானது, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக தடுப்பூசி போட்டவர்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

புதிய வகை உருமாறிய கொரோனா வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் மாற்றங்களை கொண்டுள்ளது என்றும் முன்பிருந்த கொரோனா வகைகளை காட்டிலும் வித்தியாசமான ஒன்றாக உள்ளது என்று தென்னாப்பிரிக்க பல்கலைக்கழகங்களில் உயிர் தகவலியல் பேராசிரியராக பணிபுரிந்துவரும் துலியோ டி ஒலிவேரா தெரிவித்துள்ளார்.

புதிய வகை கரோனாவால் இதுவரை கிட்டத்தட்ட 100 பேர் பாதிக்கப்பட்டிருப்பதை கிருமியியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

TNUSRB தேர்வு முடிவுகள் வெளியீடு ..

Fri Nov 26 , 2021
TNUSRB தேர்வு வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்ட சிறைக்காவலர், இரண்டாம்நிலை காவலர் மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் உள்ளிட்ட பணிகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி தமிழகத்தில் 37 மையங்களில் எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இந்த எழுத்துத்தேர்வுக்கான முடிவுகள் கடந்த பிப்.19ம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு 1:5 என்ற விகிதத்தில் 20 மையங்களில் அசல் சான்றிதழ்கள் […]
TNUSRB-Result-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய