திருவையாறு தியாகராஜ ஆராதனை விழா – பிப்ரவரி 1 ,2 தேதிகளில் வெகு விமர்சையாக …

திருவையாறில் உள்ள ஸ்ரீ சத்குரு தியாகராஜ ஆராதனை விழா வரும் பிப்ரவரி 1 ,2 தேதிகளில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது .தஞ்சை மாவட்டம், திருவையாறில் அமைந்துள்ள தியாகராஜ ஆசிரமத்தில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சியானது திங்கட்கிழமை அன்று நடைபெற்றது .

ஆண்டுதோறும் திருவையாறு தியாகராஜ ஆராதனை விழாவானது தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுவது வழக்கமாகும் .ஆனால் நடப்பாண்டில் கொரோன பரவல் காரணமாக 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது .பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் ,கொரோன தொற்றின் காரணமாக 200 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது .

தியாகராஜ ஆராதனை விழாவானது பிப்ரவரி 1 மாலை 5 மணிக்கு தொடங்கி மறுநாள் பிப்ரவரி 2 ஆம் தேதி நிறைவடைகிறது .இதில் பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சரத்தின கீர்த்தனைகள் வைபவம் நடைபெற உள்ளது .

Next Post

மருத்துவர் வி.சாந்தா அவர்களின் மறைவு : ஈடு செய்ய முடியாத பேரிழப்பு !!

Wed Jan 20 , 2021
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவரான ,மருத்துவர் சாந்தா அவர்களின் தன்னலமற்ற மருத்துவ சேவைகளால் மருத்துவத்துக்கும் ,மருத்துவத்துறையில் இருக்கும் அனைவருக்கும் சாந்தா அவர்கள் வழிகாட்டியாகவும் ,முன்னுதாரணமாகவும் இருந்து வருகிறார் . உலக புகழ்ப்பெற்ற புற்றுநோய் நிபுணரான மருத்துவர் சாந்தா அவர்கள் ,டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களால் வெறும் 10 படுக்கைகள் மற்றும் ஒரு கட்டடத்துடன் தொடங்கப்பட்ட அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் சேர்ந்து ,தனது தன்னலமற்ற சேவையை புரிந்து வந்தார் .இவர் […]
Doctor-V.santha

You May Like

கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய