இந்தியாவில் ஒரு நாளில் 3,32,730 பேருக்கு கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு இன்று மேலும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.ஒரே நாளில் புதிதாக 3,32,730 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,32,730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14.53 கோடியைத் தாண்டியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 3,32,730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,62,63 ,695 ஆக அதிகரித்துள்ளது

ICMR அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,36,48,159 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,86,920 ஆகும் .நாடு முழுவதும் இதுவரை 13,54,78,420 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பால்கன் 9 ராக்கெட் ..

Fri Apr 23 , 2021
கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 4 வீரர்களை கொண்ட பால்கன் 9 ராக்கெட் அமெரிக்க நேரப்படி இன்று காலை 5 :10 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக பால்கன் 9 ராக்கெட் மூலம் 4 வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்புவதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது.இந்நிலையில்,ஜப்பானை […]
falcon-9-satellite
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய