
உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.இதில் குறிப்பாக டெல்டா பிளஸ் வகை கொரோனவானது வரும் காலத்தில் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
தற்போது இந்தியாவில் முதன் முதலில் உறுதி செய்யப்பட்ட டெல்டா வகை கொரோனா,தற்போது 124 நாடுகளில் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.இது தவிர, கடந்த வாரத்தை விட கூடுதலாக 13 நாடுகளில் டெல்டா வகை கொரோனா தொற்றுப்பரவல் கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த 4 வாரங்களில் கொரோனா பாதித்தவர்களில் 75 சதவீதம் பேருக்கு டெல்டா வகை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனாவானது மற்ற வகைகளைக் காட்டிலும் அதி விரைவாக தாக்கக் கூடியது என்றும், அனைத்து நாடுகளிலும் இன்னும் சில மாதங்களில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தப் போவதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸானது உலக முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.பிரிட்டனில் முதலில் உறுதி செய்யப்பட்ட ஆல்ஃபா வகை 180 நாடுகளிலும், தென் ஆப்பிரிக்காவில் உறுதி செய்யப்பட்ட பீட்டா வகை 130 நாடுகளிலும், பிரேசிலில் உறுதி செய்யப்பட்ட காமா வகை 78 நாடுகளிலும் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக சுகாதார அமைப்பானது தற்போது எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.இதில் டெல்டா மாறுபாட்டை விட அதிக வீரியம் மற்றும் ஆபத்து நிறைந்த மற்றொரு மாறுபாடு விரைவில் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது.இதனால் மக்கள் அனைவ்ரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் ,கட்டுப்பாடுகளையும் அலட்சியப்படுத்தாமல் முறையாக கடைபிடித்தால் மட்டுமே எதிர்காலத்தில் வரும் பாதிப்பிலிருந்து முழுமையாக நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும்.