நாடு முழுவதும் 52 பேருக்கு “டெல்டா பிளஸ்” கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு..

நாடு முழுவதும் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் ஆனது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் ஆனது அதிக தீவிரத் தன்மை கொண்டதாகவும்,எளிதில் பரவும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.

நாடு முழுவதும் உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா தொற்று இதுவரை 50 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸ் வகைகளில் ஒன்றான ‘டெல்டா பிளஸ்’ வகை கொரோனா வைரஸால் இந்தியாவில் மகாராஷ்டிரம், கேரளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 45,000 மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 52 பேர் உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம் – 20 பேர்
தமிழகம் – 9 பேர்
மத்தியப் பிரதேசம் – 7 பேர்,
கேரளம் -3 பேர்
பஞ்சாப் – 2 பேர்
குஜராத்தில் -2 பேர்
ஜம்மு-காஷ்மீர் ,கர்நாடகம், ராஜஸ்தான்,ஒடிசா, ஆந்திரம் – தலா ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Next Post

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

Fri Jun 25 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,755 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 698, ஈரோட்டில் 597 , சேலம் 398 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் சென்னையில் 350 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 150 பேர் பலியாகியுள்ளனர். […]
district-wise-abstract-of-active-cases-in-TN
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய